Designed by Iniyas LTD
கிணற்றில் தவறி விழுந்து குடும்பஸ்தர் பலி!
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் மரக்கறிக்கு நீர்பாய்ச்சும் கிணற்றில் வீழ்ந்து 43 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் சம்பவ தினம் காலை தோட்ட வேலைக்கு, சென்று பகல் வரை வீட்டுக்கு வராமல் இருந்ததால் பகல் உணவுக்காக இவரை தேடிச் சென்றபோது கிணற்றில் வீழ்ந்து கிடந்ததை கண்டுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து பிரதேவாசிகளால் அவரை மீட்டெடுத்த போதிலும் அவர் உயிரிழந்திருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள – பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.