தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கூட்டமைப்பினருடன் அவசர சந்திப்பு நடத்தவுள்ள சபாநாயகர்…..

சபாநாயகர் கருஜயசூரிய   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்றைய தினம் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சம கால அரசியல் மாற்றங்கள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கும் அவருக்கும்  இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில்  விளக்கத்தைக் கொடுக்குமுகமாகவுமே இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதகவும் தெரியவந்துள்ளது.

இந்தச் சந்திப்பில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறானதாக அமையும் என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என அறியக்கிடைத்துள்ளது.

இதேவேளை ஏனைய அரசியல் கட்சிகளையும் சபா நாயகர் இன்றைய தினம்  சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...