தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சசிகலாவா? பன்னீரா?? அரசியல் சாசனத்தில் இறுதி முடிவு! ஆளுநர்

sasikala_Livedaypமுதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆகியோர் அடுத்தடுத்து ஆளுநரை சந்தித்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

குடியரசுத் தலைவர் அலுவலகம், பிரதமர் அலுவலகம், உள்துறை அலுவலகம் ஆகியவற்றிற்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் அறிக்கை அனுப்பியுள்ளதாக மத்திய அரசின் உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில், “உரிய ஆலோசனைக்கு பிறகே முடிவு எடுக்கப்படும். சட்ட மற்றும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆளுநரிடம் மற்றொரு விரிவான அறிக்கை பெறப்படும் என்று மத்திய அரசின் உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...