Designed by Iniyas LTD
சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் குறித்து அறிக்கை வெளியாகும் – மைத்திரி உறுதி
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நிறைவடைவதற்குள் யுத்தக்குற்ற விசாரணைகள் நிறைவு செய்யப்படும் என்று, சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ பிரித்தானிய அரசாங்கத்திடம் உறுதி வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் பிரித்தானிய சென்றிருந்த அவர், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரனை சந்தித்து இந்த உறுதிமொழியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் குறித்து அறிக்கை வெளியாக்கப்படும்.
இந்த அறிக்கை தாமதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த காலப்பகுதிக்குள் விசாரணைகள் நிறைவு செய்யப்படும் என்று அவர் உறுதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.