தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறுத்தையை கொன்ற 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு.

கிளி­நொச்­சி­யில் சிறுத்தை ஒன்று அடித்­துக் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்­தின் பின்­னர் சர­ண­டைந்தும், கைது செய்­யப்­பட்­டும் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த 10 பேரின் விளக்கமறி­யல் மேலும் நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த உத்தரவை   கிளி­நொச்சி நீதி­மன்று பிறப்பித்துள்ளது.

கிளி­நொச்சி அம்­பாள்­புரம் கிரா­மத்­துக்­குள் புகுந்த சிறுத்தை அந்­தப் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­க­ளால் அடித்­துக் கொல்­லப்­பட்­ட நிலையில்  அது தொடர்­பில் வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­தி­னர் கிளி­நொச்சி நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்திருந்தனர்.

இதைஅடுத்து  குறித்த வழக்கு நேற்றைய  தினம்  மீள எடுத்­துக் கொள்­ளப்­பட்­ட­போதே சம்பவம் தொடர்பில்  கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த   சந்தேக நபர்களை  நாளை வரை விளக்­க­ம­றி­லில் வைக்­கு­மாறு கிளிநொச்சி நீதி மன்று உத்­த­ர­விட்­டமை  குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...