Designed by Iniyas LTD
சுகாதார துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு 48 மணித்தியாலத்திற்கு தீர்வு வேண்டும்!
எதிர்வரும் 48 மணித்தியாலத்திற்குள் சுகாதார துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்காவிட்டால் தீவிர தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க போவதாக அரச சேவை ஐக்கிய தாதிகள் சங்கத்தின் தலைவர் முருத்துட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
நாராஹேன்பிட்ட அபயராம விகாரையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.