Designed by Iniyas LTD
சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி!
பதுளை – ஹலிஎல மொரகொல்ல பிரதேசத்தில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதே இடத்தைச் சேர்ந்த 4 வயதான சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சிறுவன் தனது தாத்தாவிடமே வளர்ந்து வரும் நிலையில், விபத்து இடம்பெற்ற வேளை தாய் மற்றும் தந்தையும் வீட்டில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக மரண பரிசோதனையில் தெரியவந்துள்ளது.