தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு பெங்களூரு நீதிமன்றம் ரூபாய் 65 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது

ஜெயலலிதாஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு பெங்களூரு நீதிமன்றம் ரூபாய் 65 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

இறுதி வாதத்தை தொடங்க பவானி சிங் மேலும் கால அவகாசம் கேட்டதையடுத்து நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார். வழக்கை தாமதப்படுத்தும் முயற்சி என்றும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும், இறுதி கட்ட வாதத்தை இன்று சனிக்கிழமை 15-03-2014 அன்று  கண்டிப்பாக தொடங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள  நீதிபதி, வாதம் தொடங்காவிட்டால் மீண்டும் 65 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்

Comments
Loading...