Designed by Iniyas LTD
ஜெ வழக்கில் இருந்து விடுதலை பெற தமிழகத்தின் முக்கிய கோவில்களில் சிறப்புப் பூஜை
தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை பெற வேண்டும் என்று தமிழகத்தின் முக்கியக் கோவில்களில் சிறப்புப் பூஜை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெங்களூர் தனி நீதிமன்றத்தில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது நடந்த சொத்துக் குவிப்பு வழக்கின் மீதான தீர்ப்பு 27ம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா சொத்துக் குவிப்புவழக்கில் விடுதலை பெற வேண்டும் என்று தமிழக அரசின் அறநிலையத்துறை அதிகாரிகளே சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், சிறப்பு பூஜை நடத்தி பிரசாதத்தை முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ரகசிய உத்தரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.