தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தணியா தமிழீழ தாகத்துடன் ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைபயணம்

haag 29.1

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக ஆரம்பமாக்கிய ஐநா நோக்கிய நீதிக்கான பயணம் நேற்று (29.01.2014) மாலை Rotterdamm நகரை வந்தடைந்தது.

கடும் குளிர் காற்று என காலநிலை சீராக இல்லாத சூழ்நிலையிலும் மாவீரர்களின் , மக்களின் நினைவுகளை மனத்தில் பதித்து , பல்வேறு மொழிகளில் எமது இன அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

இன்று காலை மனிதநேய பணியாளர்கள் ஐநா நோக்கிய நீதிக்கான பயணத்தை தொடர இருக்கின்றனர் .

ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணத்தில் பங்கெடுக்கும் நெதர்லாண்ட் நாட்டை சேர்ந்த சூரி, பிரித்தானியாவை சேர்ந்த சிவந்தன், யேர்மனியை சேர்ந்த செந்தில்குமரன் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வித்தியானந்தன்  ஆகியோரின் சனநாயகப் போராட்டம் வெற்றி அளிப்பதற்காகவும் அவர்களை வாழ்த்துவதற்காகவும் உலகத் தமிழ் மக்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் : 0031684999900

 

Comments
Loading...