Designed by Iniyas LTD
தமிழ் இளையோர் இயக்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் நினைவேந்தல் நிகழ்வு!
சிங்கள இனவாதிகளாலும் காடையர்களாலும் பல்லாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட கருப்பு யூலை மற்றும் தமிழராய்ச்சி மாநாடு படுகொலை ஆகியவற்றினை நினைவு கூறும் முகமாக யாழ்ப்பணத்தில் படுகொலை நடந்த முற்றவெளியில் மாபெரும் நினைவேந்தல் நிகழ்வினை 30.07.2017 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடத்த தமிழ் இளையோர் இயக்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ் இளையோர் இயக்கத்தினர் கேட்டுக்கொள்கின்றனர்.

