Designed by Iniyas LTD
தாயக தமிழ் மக்களை அச்சுறுத்தும் சிறீலங்கா புலனாய்வு பிரிவினர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் தொடர்ந்தும் புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் நிறைவடைந்த பின்னர், சுமார் 1080 குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளில் குடியேறியுள்ளனர். 
அவர்களை தொடர்ந்தும் புலனாய்வுத் தரப்பினர் அச்சுறுத்தி வருகின்றனர். அதேநேரம் அவர்களுக்கான எந்த உதவிகளையும் வழங்க வேண்டாம் என்று, பிரதேச செயலகங்களினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.