தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியங்கா!

முதன் முதலில் சுட்டி டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் பிரியங்கா.

இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த “ஒல்லி பெல்லி” நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷ் உடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது.

மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சூப்பர் சிங்கர் 8”, மற்றும் சமீபத்தில் முடிவடைந்த “ஸ்டார்ட் ம்யூசிக்” நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் பிரியங்கா.

இந்நிலையில் நகைச்சுவையாக ஆன்கறிங்கின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த பிரியங்கா தற்போது தீடீரென உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். இதனை அவரே தனது யூடுயூப் தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

Comments
Loading...