Designed by Iniyas LTD
திருகோணமலை காட்டில் அமெரிக்க மரைன்!
திருகோணமலைத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்க கடற்டையின் யுஎஸ்எஸ் சோமசெற் கப்பலில் வந்துள்ள அமெரிக்க மரைன் படைப்பிரிவினர் சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் ஆரம்பித்த இந்தப் பயிற்சிகள் இன்றுடன் நிறைவடையவுள்ளன.
நேற்றுமுன்தினம், தரையிறக்கப் பயிற்சிகளை மேற்கொள்ள அமெரிக்க – சிறிலங்கா மரைன் படைப்பிரிவுகள் நேற்று காட்டுப் பகுதிக்குள், முகாமிட்டு, கண்ணிவெடிகளை அகற்றும், மற்றும் தாக்குதல்களில் ஈடுபடும் பயிற்சிகளை மேற்கொண்டன.
இதற்காக டொக்யார்ட் தளத்தை அண்டிய காட்டுப் பகுதியில் அமெரிக்கப் படையினர் கூடரம் அமைத்து தங்கியிருந்தனர்.