Designed by Iniyas LTD
திருமலையில் பெண் பலி! கணவருக்கு சிறை
திருகோணமலை, திரியாய் சந்தியில், டிமோ பட்டா லொறியின் முன் கதவால் விழுந்து படுகாயமடைந்த பெண், திருகோணமலை பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
கோமரங்கடவெல, குறுஞ்சான்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான நந்தாவத்தி புஸ்பா (வயது 43 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் கடந்த 18ஆம் திகதி இரவு 9.30 மணியளவில் கணவருடன் டிமோ பட்டா லொறியில் சாரதிக்கு அருகிலுள்ள இருக்கையில் இருந்து சென்றுள்ளதாகவும் கதவு மூடப்படாமல் சென்றதால் தவறுதலாக விழுந்ததாகவும் சாரதியான கணவர் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, லொறியை செலுத்திச் சென்ற கணவனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார். விபத்து தொடர்பாக மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.