Designed by Iniyas LTD
திருவள்ளுவரின் திருக்குறள்
குறள் 96:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
மு.வரதராசன் விளக்கம்:
பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.
சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
தீமைகள் அழிந்து நன்மை பெருகும் நல்லது எது என்று தேடி இனிமையான வார்த்தைகள் பேசினால்.