Designed by Iniyas LTD
நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி!
நண்பர்களுடன் நீராடச் சென்ற 16 வயது நிரம்பிய மாணவன் மிபிலிமான குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கந்தயெல பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. வெலிமடையைச் சேர்ந்த நிமேச துலங்க ரணசூரிய என்ற மாணவனே நீரில் மூழ்கிப் பலியானவராவார்.
மேலதிக வகுப்புக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, நண்பர்களுடன் குளத்தில் குளிக்கச் சென்ற வேளையிலேயே,மேற்படி அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
பலியான மாணவருடன் எட்டு மாணவர்கள் நீராடச் சென்றிருந்தனர். அவர்கள் வெலிமடைப் பொலிஸாரினால் விசாரணைக்குற்படுத்தப்பட்டுள்ளனர். அனர்த்தம் இடம்பெற்று தகவல் கிடைத்ததும் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.