தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாட்டில் 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டின் பெரும்பாலான  பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவுகின்ற போதும், 6 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை  அனர்த்த முகாமைத்துவமத்திய நிலையம் அறிவித்துள்ளது.

  புத்தளம்

இதில்  புத்தளம் மாவட்டமே அதிக பாதிப்பை சந்தித்துள்ளதாகவும்,  அங்கு  68 ஆயிரத்து 648 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 16 ஆயிரத்து 670 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவம் தெரிவித்துள்ளது.

குருநாகல், வட மாகாணம்

குருநாகல் மாவட்டத்தில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 803 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை  வட மாகாணத்தில்  72 ஆயிரத்து 486 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 51 ஆயிரத்து 449 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் 35 ஆயிரத்து 112 பேரும், மன்னாரில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 163 பேரும், முல்லைத்தீவில் 16 ஆயிரத்து 934 பேரும், வவுனியாவில் 17 ஆயிரத்து 926 பேரும், யாழ்ப்பாணத்தில் 79 ஆயிரத்து 314 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவம் குறிப்பிட்டுள்ளது.

Comments
Loading...