Designed by Iniyas LTD
நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுக்க சென்னை மெரினாவில் போலிஸ் பாதுகாப்பு
இலங்கையில் போரின் போது உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடத்த இருப்பதாக தகவல் ஒன்று வெளிவந்திருந்தது.
இந்த நிகழ்விற்கு 13 இயக்கங்கள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்திருந்த நிலையில் மெரினா மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மெரினா பகுதியில் பல்வேறு அமைப்பினர் நுழையாமல் இருக்க போலீஸ் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

