Designed by Iniyas LTD
பாக்கிஸ்தானில் பொம்மை வெடிகுண்டு வெடித்து 3 பேர் பலி
பாகிஸ்தானில் ‘பொம்மை வெடிகுண்டு’ வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் ஸ்வாட் மாவட்டத்தில், பாஷிகிராம் என்ற இடத்தில், ஜார் முகமது என்பவருடைய வீட்டின் வெளியே நேற்று ஒரு பொம்மை கிடந்திருக்கிறது. அதைப் பார்த்த அவரது குழந்தைகள், அதை வீட்டுக்குள் எடுத்துச்சென்று, விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் பலத்த சத்தத்துடன் அது வெடித்தது. அப்போதுதான் அது பொம்மை வெடிகுண்டு என தெரிய வந்தது.இந்த குண்டுவெடிப்பில் ஜார் முகமதுவும், அவரது 2 குழந்தைகளும் பலியாகினர். 3 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் வெடிகுண்டு செயலிழப்பு படையினர் அங்கு விரைந்து சென்று, தடயங்களை சேகரித்ததுடன் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.