தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிறரின் பொறாமையால் ஏற்படும் திருக்ஷ்டியில் இருந்து விடுபட இதை செய்யுங்கள்…

இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும். ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது  கண்பார்வை திருஷ்டி எனப்படும்

வீட்டிற்கு உறவினர்கள், நண்பர்கள் வந்து போவார்கள். அப்படி வந்து போகிறவர்களில் ஒருசிலர் மட்டு பொறாமைக் குணத்தோடு வீட்டிற்குள் வந்து செல்லும்போது, .

அவர்களின் பொறாமைத் தீ எனப்படும் திருஷ்டி தோஷம் நம் வீட்டினுள் புகுந்து கொள்ளும்.

இதனால்  வீட்டில் உள்ளவர்களுக்கு   பண விரயம் ஏற்படும். பொருட்கள் வைத்த இடம்  தெரியாமல் போகும். சில பொருட்கள் உடைந்து போகும். கால்கள் இடறி காயங்கள் ஏற்படும்.

திருஷ்டியை விரட்டியடிக்க,,  

. 01)  குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோசம் நீங்க, தெருமண் கொஞ்சம் எடுத்து கடுகு,உப்பு,மூன்று மிளகாய், எல்லாம் சேர்த்து  கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும்.

இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்.

02) எப்படிபட்டவர் வீட்டிற்குள் வந்து சென்றாலும் சுகம் கொடுக்க கூடியது சீரகம் என்று சித்தர்கள் கூறி உள்ளார்கள். எனவே ஒவ்வொருவர் வீட்டிலும் விருந்து நடைபெறும் காலங்களில்,

கருப்பட்டி கலந்த சீரக பானகம் தயாரித்து வீட்டிற்கு  வந்தவர்களுக்கு கொடுத்தால் விஷப் பார்வை உள்ளவர்களின் திருஷ்டி தோஷம் விலகும்.

03) திருஷ்டி தோஷம் விட்டினுள் அதிகமாக இருந்தால், அல்லது மனது கஷ்டமாக இருந்தாலும் இந்த சீரகமும், கருப்பட்டியும்  கலந்த பானகம் தயாரித்து அதனை உங்கள் பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு எடுத்து சென்று அங்கு உள்ள பக்தர்களுக்கு, ஏழை எளியவர்களுக்கும் கொடுக்க, திருஷ்டி தோஷம் விலகும்.

Comments
Loading...