தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புலம்பெயர் விடுதலைப் புலிகளுக்கு ஸ்ரீலங்கா குடியுரிமை வழங்கப்படாதாம்!

ltte-in-ukஇரட்டை குடியுரிமை அனு­மதி வழங்­கு­வது எந்த வகை­யிலும் நாட்­டுக்கு பாதிப்பு இல்லை. புலம்­பெயர் புலி  நபர்­க­ளுக்கு எந்த வகை­யிலும் குடியுரிமை வழங்­கப்­ப­டாது என ஸ்ரீலங்கா அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. வெளி­நா­டு­களில் வாழும் தமிழ் பிர­ஜை­க­ளுக்கு தடை­க­ளின்றி பிர­ஜா­வு­ரி­மைக்­காக விண்­ணப்­பிக்க முடியும் எனவும் குறிப்­பிட்­டது.

இரட்டை குடியுரிமை வழங்கும் நட­வடிக்­கைகள் தற்­போது அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. தெரி­வு­செய்­யப்­பட்ட 2ஆயி­ரத்து 500 பேருக்கு இம்­முறை இரட்டை குடியுரிமை சான்­றிதழ் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. இது தொடர்பில் வின­வி­ய­போதே அமைச்­ச­ரவை இணை பேச்­சா­ளரும் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான கயந்த கரு­ணா­தி­லக மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

இரட்டை குடியுரிமை வழங்கும் திட்டம் இப்­போது உரு­வாக்­கப்­பட்ட ஒன்­றல்ல. கடந்த காலத்தில் இருந்து இந்த முறைமை கையா­ளப்­ப­டு­கின்­றது. முன்­னைய அர­சாங்­கத்தில் கூட தமக்கு வேண்­டப்­பட்ட பல­ருக்கு இரட்டை குடியுரிமை வழங்­கப்­பட்­டது. குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு கூட இவ்­வாறு இரட்டை குடியுரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் எமது அர­சாங்­கத்தில் அவ்­வாறு வேண்­டப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ற சிறப்பு சலு­கைகள் எவையும் இல்லை. நாம் இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பு விதி­மு­றைக்கு அமைய இந்த பொறி­மு­றை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

கடந்த ஆண்டு இரட்டை குடியுரிமைக்­கான விண்­ணப்பம் கோரப்­பட்டி­ருந்­தது. இலங்­கையில் வசிப்­ப­வ­ருக்கு மட்டும் அல்­லாது வெளி­நா­டு­களில் வசிக்கும் இலங்­கை­யர்­க­ளுக்கும் விண்­ணப்­பிக்க கோரப்­பட்­டி­ருந்­தது. அந்த வகையில் கடந்த ஆண்டு இறுதிக் கால­கட்டம் வரையில் 20ஆயி­ரத்­துக்கும் அதி­க­மானோர் இரட்டை குடியுரிமைக்கு விண்­ணப்­பித்­தி­ருந்­தனர். அதில் 4ஆயி­ரத்து 500பேருக்கு இந்த சான்­றிதழ் பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டது.

அதேபோல் இந்த திட்­டத்தின் இரண்டாம் கட்­ட­மா­கவே இப்­போதும் இரட்டை குடியுரிமை வழங்கும் வகையில் நட­வடிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. இம்­மு­றையும் 20ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான இலங்­கை­யர்கள் விண்­ணப்­பித்­துள்­ளனர். இதில் தெரி­வு­செய்­யப்­பட்ட 2ஆயி­ரத்து 500 பேருக்கு இம்­முறை இரட்டை குடியுரிமை சான்­றிதழ் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. எதிர்­வரும் மார்ச் 15ஆம் திகதி பண்­டா­ர­ந­ாயக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் இந்த நிகழ்வு ஜனா­தி­பதி பிர­தமர் தலை­மையில் நடை­பெறும் என இப்­போது தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

கேள்வி:- இரட்டை பிர­ஜா­வு­ரிமை விண்­ணப்­பத்தில் புலம்­பெயர் இலங்­கை­யர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­கின்­றதா?

பதில்: தனிப்­பட்ட எவ­ருக்கும் என்ற விசேட சலு­கைகள் எவையும் வழங்­கப்­ப­டாது. ஆனால் தகு­தி­யா­ன­வர்கள் அனை­வரும் இதில் விண்­ணப்­பிக்க முடியும். வெளி­நாட்டில் வாழும் இலங்­கை­யர்கள் பலர் விண்­ணப்­பித்­துள்­ளனர். அதில் தமி­ழர்­களும் பலர் உள்­ளனர் என தகவல் கிடைத்­துள்­ளது. ஆகவே அதில் தடைகள் எவையும் இல்லை. பெரும்­பாலும் வியா­பார நோக்­கத்தில் செயற்­படும் நபர்கள் இந்த இரட்டை குடியுரிமையை கையாள்­வதால் அவர்­க­ளுக்கு வாய்ப்­புகள் அதி­க­மாக உள்­ளது.

கேள்வி:- சர்­வ­தேச தரப்பில் செயற்­படும் புலம்­பெயர் அமைப்­பு­களும் புலி­களின் உறுப்­பி­னர்­களும் இந்த நட­வ­டிக்­கையை சாத­க­மாக பயன்­ப­டுத்த வாய்ப்­புகள் உள்­ள­தாக ஒரு­சில கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. இதில் அர­சாங்கம் எவ்­வாறு செயற்­ப­டு­கின்­றது?

பதில்:- இந்த குற்­ற­சாட்டு முட்­டாள்­த­ன­மா­னது. இலங்­கையில் செயற்பட அனுமதிக்கும் சந்தர்ப்பத்தில் விண்ணப்பிப்பவர்கள் யார் என்ற முழுமையான தகவல்களை அரசாங்கம் ஆராயும். பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் இதில் விண்ணப்பித்துள்ள நிலையில் குறிப்பிட்ட சிலருக்கே இந்த சலுகைகளை வழங்க தீர்மானித்துள்ளோம். எனவே இதில் நாம் அதிக அக்கறையுடன் செயற்படுகிறோம். இரட்டை குடியுரிமை வழங்குவது எந்த வகையிலும் நாட்டுக்கு அச்சுறுத்தல் இல்லை. என அவர் தெரிவித்துள்ளார்

சர்வதேசத்துக்கு நல்லிணக்கம் எனக்கூறி மறைமுகமாக தனது இனவாதத்தை ஒவ்வொரு தடவையும் ஏதோ ஒரு விதத்தில் தற்போதைய அரசு வெளிப்படுத்திவருகிறது. அரசியல் கைதிகள் விடயத்திலும் சரி காணாமல் போனோரின் விசாரணை எனும் நாடகத்திலும் சரி மறைமுகமான இனவாதத்தை மைத்திரி அரசு வெளிப்படுத்துகிறதென்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...