தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புலிக்கு பயத்தில் மரத்தில் தொங்கிய சுற்றுலா பயணி!

showImageInStoryநேபாள காடொன்­றுக்குச் சென்ற நெதர்­லாந்து சுற்­றுலாப் பய­ணி­யொ­ருவர், அங்கு தன்னைத் தாக்க வந்த புலி­யிடமிருந்து தப்ப இரு மணித்­தி­யால நேர­மாக மர­மொன்றில் தொங்கிக்கொண்­டி­ருந்த நிலையில் மீட்­கப்­பட்­டுள்ளார். கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கிழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

பொறி­யி­லா­ள­ரான ஜெரால்ட் வான் லார் (33 வயது) என்ற மேற்­படி நபர், நேபா­ளத்தைச் சேர்ந்த வழி­காட்­டி­யுடன் பார்­டியா தேசிய பூங்கா வனப் பிராந்­தி­யத்­துக்கு சுற்­றுலா சென்ற வேளை­யி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

புலியைக் கண்ட வழி­காட்டி அங்­கி­ருந்து தப்­பி­யோட அவரைத் துரத்திச்சென்ற புலி அவரைக் காயப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனினும் அவர் அங்­கி­ருந்து ஒரு­வாறு தப்பிச் சென்­றுள்ளார்.

இந்தச் சந்­தர்ப்­பத்தில் ஜெரால்ட் மர­மொன்றில் ஏறி­யுள்ளார்.

வழி­காட்டி தப்பிச்சென்­றதால் சின­ம­டைந்த புலி மீண்டும் ஜெரால்ட்டைத் தேடி வந்­துள்­ளது.

ஜெரால்ட் மரத்தில் ஏறித் தொங்கிக்கொண்­டி­ருப்­பதைப் பார்த்த புலி அந்த மரத்தை சுற்றி ஆவே­சத்­துடன் வலம் வந்­துள்­ளது. அவர் தரை­யி­லி­ருந்து சுமார் 6 மீற்­றர்கள் உய­ரத்தில் தொங்கிக்கொண்­டி­ருந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து தப்பிச்சென்ற வழி­காட்டி வன உத்­தி­யோ­கத்­தர்கள் சகிதம் சம்­பவ இடத்­துக்கு வந்­த­தை­ய­டுத்து, அந்த உத்­தி­யோ­கத்­தர்­களால் புலி அங்­கி­ருந்து வெளி­யேற்­றப்­பட்டு ஜெரால்ட் பாது­காப்­பாக மீட்­கப்­பட்டார்.

பார்டியா தேசிய பூங்காவில் சுமார் 70 புலிகள் உள்ள போதும் அவை பார்வையாளர்களை தாக்குவது அரிதாக இடம்பெறும் சம்பவமாக கருதப்படுகிறது.

 

Comments
Loading...