Designed by Iniyas LTD
பெர்லின் தாக்குதல் தீவிரவாதி அடையாளம் காணப்பட்டான்!
பேர்லின் கிறிஸ்மஸ் சந்தை தாக்குதலில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் 24 வயதுடைய துனீசிய நபர், தேடப்படுபவர் என கூறும் சுவரொட்டியானது ஐரோப்பா முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் சந்தைக்குள் லொறியைச் செலுத்தி 12 பேரை கொலை செய்த சந்தர்ப்பத்தில் அந்த லொறிக்குள் இருந்து சந்தேகநபரின் அடையாள அட்டை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த தாக்குதலை நடத்திய அகிஸ் அம்ரி ஆயுதம் வைத்திருக்கலாம் என்றும், ஆபத்தானவர் என்றும் ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரை கைது செய்ய வழிவகுக்கும் எந்தவொரு தகவல்களுக்கும் 100,000 யூரோ சன்மானமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
