Designed by Iniyas LTD
மகிந்தவின் ஆடம்பர மாளிகையை சுற்றுலா அதிகார சபையினரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு….
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபேது காங்கேசன்துறை, கீரிமலைக்கு அண்மையாக அமைக்கப்பட்ட ஆடம்பர மாளிகையை சுற்றுலா அதிகார சபையினரிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் படையினர் வசம் உள்ள நிலங்கள் தொடர்பில் நேற்று முன்தினம் ஜனாதிபதி தலமையில் கொழும்பில் ஓர் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
இதில் மாவட்டச் செயலாளர் மற்றும் காணி உத்தியோகத்தர்கள , சுற்றுலா அதிகார சபையினர் , ஜனாதிபதி செயலக அதிகாரிகள் , படை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் தற்போதும் படையினர் வசமுள்ள நிலங்களில் விரைவில் விடுவிக்கப்படக்கூடிய நிலங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இதில் இராணுவத்தினரிடம் உள்ள நிலங்களில் வலி வடக்கின் குரும்பசிட்டி மற்றும் பலாலி வீதிக்கு கிழக்குத் திசைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
அதோடு தெல்லிப்பளை அச்சுவேலி வீதி விடுவிப்பின் சாத்தியங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு அவை தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடற்படையினர் வசமுள்ள கீரிமலைப் பிரதேசம் தொடர்பில் ஆரயப்பட்டவேளையில் அங்கே அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை உள்ளட்ட பிரதேசத்தினை முழுமையாக விடுவித்து ,
அதில் முன்னாள் ஜனாதிபதி மாளிகையினை மட்டும் சுற்றுலா அதிகார சபையினரிடம் கையளிப்பதற்கும் எஞ்சிய நிலத்தினை நிலத்தின் உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுமார் 100 ஏக்கர் விஸ்திரனம் கொண்ட குறித்த மாளிகையினை வடக்கு மாகாண சபையிடம் கையளிக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை ஓர் தீர்மானம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்த சமயம் அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சகிதம் குறித்த ஜனாதிபதி மாளிகையினைப் பார்வையிட்டதோடு இந்த மாளிகையினை வடக்கு மாகாண சபையை பொறுப்பேற்குமாறு கூறியிருந்தபோதும் அது தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
