Designed by Iniyas LTD
மகிந்த குடும்பத்தை போர்குற்ற நீதிமன்றில் நிறுத்த அரசு சதி!
மனிதவுரிமை ஆணையாளரின் இலங்கை விஜயத்தில் இரகசிய திட்டங்கள் இருப்பதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று இலங்கை வரும் மனிதவுரிமை ஆணையாளர் …. வடமாகாண முதலமைச்சர் மற்றும் யுத்த பாதிப்புக்கு உள்ளான மக்களையும் சந்திக்கவுள்ளார்.
அவரது விஜயத்துக்கு சமாந்தரமாக சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றத்தினை நியமித்து ராஜபக்சவினரையும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினரையும் தண்டனைக்கு உட்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.