தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகிந்த ராஜபக்ஷ புலம்பெயர் மக்களின் இலக்கு! இராணுவ பாதுகாப்பு அவசியம் தேவையாம்

senpakam copyமஹிந்த ராஜ­பக் ஷ புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­களின் பிர­தான இலக்காகி­யுள்­ளார். எனவே அவரின் பாது­காப்பு குறைக்­கப்­பட்­டுள்­ளமையினால் அவ­ருக்கு உயிர் அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது என தேசிய சுதந்­திர முன்­னணி தெரி­விக்­கின்­றது.வன்­னி­யி­லுள்ள இரா­ணுவ முகாம்­களை பார்­வை­யிட ஐ.நா.பிர­தி­நி­தி­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­ப­டு­வதால் இறுதி யுத்த காலத்தில் கைது செய்­யப்­பட்ட பிர­பல புலி உறுப்­பி­னர்கள் விடு­த­லை­யாகும் சாத்­தி­யங்கள் இருப்­ப­தாக தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் ஊட­கப்­பேச்­சாளர் மொஹமட் முஸம்மில் தெரி­வித்த்துள்ளார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­போது ஐக்­கிய நாடுகள் சபையின் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு எதி­ரான யுத்தக் குற்ற விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றி­ருக்­கையில் ஐ.நா.பிர­தி­நி­திகள் எமது நாட்­டினுள் வந்து இலங்­கைக்கு எதி­ரான சாட்­சி­யங்­களை திரட்­டு­கின்­றனர்.

இவ்­வாறு இலங்­கைக்கு எதி­ராக சாட்­சி­யங்கள் திரட்ட இலங்­கைக்கே வரு­கின்­ற­வர்­க­ளுக்கு நல்­லாட்சி அர­சாங்­கம் வன்னி, திரு­கோ­ண­ம­லையில் உள்ள இராணுவ முகா­கம்­களை பார்­வை­யிட அனு­மதி வழங்­கு­கின்­றது.அவர்கள் அதனை பார்த்­து­விட்டு இலங்கையைப் பாராட்­டி­விட்டுச் செல்­ல­வில்லை. ஜெனிவா சென்ற பின்னர் எமது நாட்டுக்கு எதி­ரா­கவே குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்­கின்­றனர்.என தெரிவித்துள்ளார்.

Comments
Loading...