தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மனிதவுரிமை நிலை தொடர்பில் அல் ஹூசைன் ஐ.நா வில் உரை!

syed-al-husseinஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர ­வையின் 31 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை 29 ஆம் திகதி ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் முத­லா­வது அமர்­வின்­போது உரை­யாற்­ற­வுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுஸைன் இலங்­கைக்கு மேற்­கொண்ட விஜயம் தொடர்பில் பேர­வைக்கு விளக்கம் அளிக்­க­வுள்ளார்.

செய்ட் அல் ஹுஸைன் தனது நீண்ட உரையில் இலங்கை தொடர்­பாக ஒரு பகு­தியை ஒதுக்கி உள்ளார் எனவும் அத­னூ­டாக இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்­பான தனது குறு­கிய விளக்­கத்தை அளிப்பார் எனவும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 31 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பாக விவாதம் நடத்­து­வ­தற்கு எந்­த­வொறு தினமும் இது­வரை நிகழ்ச்சி நிரழ் அட்­ட­வ­னையில் ஒதுக்­கப்­ப­ட­வில்லை.

எனினும் நாடு­களின் பிர­தி­நி­திகள் உரை­யாற்­றும்­போது அவ்­வப்­போது இலங்கை குறித்து கேள்­விகள் எழுப்­பப்­படும் என கூறப்­ப­டு­கின்­றது. இலங்­கையின் சார்பில் ஜெனி­வாவில் உள்ள இலங்­கைக்­கான வதி­விட பிர­தி­நிதி ரவ­நாத ஆரி­ய­சிங்க தலை­மை­யி­லான குழு­வினர் 31 ஆவது கூட்டத் தொடரில் பங்­கேற்­க­வுள்­ளனர்.

உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள், முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய வேலைத்­திட்­டங்கள், ஏற்­க­னவே நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைகள் உள்­ளிட்ட பல்­வேறு நிலை­மைகள் குறித்து இம் முறை 31 ஆவது கூட்டத் தொடரில் 47 உறுப்பு நாடு­க­ளினால் விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

மேலும் எதிர்­வரும் 29 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள முத­லா­வது அமர்வில் மனித உரிமைப் பேர­வையின் தலைவர் சொய் கியோம்லிங் ஐ.நா பொதுச் சபை தலைவர் மற்றும் ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் ஆகியோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

அதன் பின்னர் பல்­வேறு உறுப்பு நாடுகள் உரை­யாற்­ற­வுள்­ள­துடன் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பிர­தி­நியும் முதலாம் நாள் அமர்வில் உரை­யாற்­ற­வுள்ளார். இதன்­போது இலங்கை தொடர்பில் பிரஸ்­தா­பிக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அது­மட்­டு­மின்றி செவ்வாய் மற்றும் புதன் கிழமை தினங்­களில் ரஷ்யா,சுவீடன், நோர்வே, ஜப்பான், இத்­தாலி, அவுஸ்­ரே­லியா ஆகிய நாடு­களும் பொது­ந­ல­வாய நாடு­களின் பிர­தி­நி­தியும் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

இம்­மா­தத்தின் ஆரம்ப பகு­தியில் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்­கையின் மனித உரிமை நிலை­மைகள் குறித்து மதிப்­பீடு செய்­தி­ருந்தார். தனது விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு கருத்து வெளி­யிட்­டி­ருந்த ஹுசென் வெளி­நாட்டு நீதி­ப­திகள் தொடர்பில் தீர்­மானம் எடுப்­பது இலங்­கையின் இறைமை தொடர்­பான முடி­வாகும் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

அத்­துடன் நாங்கள் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் சார்­பாக பரிந்­து­ரை­களை முன்­வைக்­கலாம். ஆனால் தீர்­மானம் எடுப்­பது இலங்­கையின் இறை­மை­யாகும். இந்த செயற்­பாட்டின் இறு­தியில் பாதிக்­கப்­பட்டோர் தமக்கு வழங்­கப்­பட்ட நீதி தொடர்பில் திருப்தி அடை­ய­வேண்டும். நம்­பிக்கை கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வேண்டும். ஐ.நா. இதனை நல்­லது என்றோ கெட்­டது என்றோ சொல்­லு­வது இறுதி முடிவு அல்ல. பாதிக்­கப்­பட்ட பெற்­றோர்கள், பிள்­ளைகள் , மனை­வி­மார்கள், அர­சாங்கம் திருப்­தி­க­ர­மாக செயற்­பட்­டுள்­ளது என்று கூறு­வதே இங்கு முக்­கி­ய­மா­ன­தாகும் என்றும் அல் ஹுசேன் கூறி­யி­ருந்தார்.

மேலும் எமது அறிக்­கையில் நாங்கள் சர்­வ­தேச நீதி­மன்றம் குறித்து பேச­வில்லை. அதற்­கான நியா­யா­திக்க செயற்­பா­டுகள் எந்­த­ளவு கடி­ன­மா­னவை என எங்­க­ளுக்குத் தெரியும். இது தொடர்பில் இலங்­கையில் சட்­ட­மூ­லங்கள் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும். இலங்கைப் பாரா­ளு­மன்­றத்தில் அவ்­வா­றான சட்­ட­மூ­லங்கள் நிறை­வேற்­றப்­ப­டு­வது கடி­ன­மான செயற்­பா­டாகும். எனவே இங்கு சர்­வ­தேச நீதி­மன்றம் என்ற விவ­காரம் விவா­தத்­திற்­குட்­ப­ட­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. இது இலங்­கையின் செயற்­பா­டா­கவே அமையும் எனவும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

கடந்த செப்­டெம்பர் மாதம் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்­பான பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்­டது. இந்த பிரே­ர­ணையை அமெ­ரிக்கா உள்­ளிட்ட ஐந்து நாடுகள் தாக்கல் செய்­தி­ருந்­தன. இறு­தியில் இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளும் பிரேரணைக்கு அனுசரணை வழங்கியிருந்தன.

இந்தப் பிரேரணையில் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொதுநலவாய வெளிநாட்டு நீதிபதிகள் சட்டத்தரணிகள் வழக்கறிஞர்களைக்கொண்டு விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்து. பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...