தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மல்லாகத்தில் ரயிலில் மோதி குடும்பஸ்தர் பலி!

downloadமல்லாகம் கோட்டைக்காடு பகுதியில் இன்று வியாழக்கிழமை (04) இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஏழாலை மேற்குப் பகுதியைச் சேர்ந்த சண்முகவடிவேல் சிவசங்கர் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ரயில் தண்டவாளத்தை கடக்க முற்பட்டவரை, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற கடுகதி ரயில் மோதியுள்ளது.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...