Designed by Iniyas LTD
யாழ் -பொம்மைவெளிப் பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் வாய்காலுக்குள் போடப்பட்டிருந்த பழைய துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் சில யாழ்ப்பாணம் ஸ்ரீ பொலிஸாரால் இன்று காலை மீட்கப்பட்டன. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவை மீட்கப்பட்டன.
நீதிமன்றத்தின் அனுமதியுடன் சிறப்பு அதிரடிப் படையினர் ஊடாக அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன; என்று பொலிஸார் தெரிவித்தனர்.