Designed by Iniyas LTD
வரவு செலவுத் திட்டம் ஏமாற்றத்தையே தந்துள்ளது: செல்வம் அடைக்கலநாதன்
வரவு செலவுத் திட்டமானது, வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு ஏமாற்றத்தினையே அளித்துள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
குறித்த வரவு செலவுத் திட்டமானது, நிதியமைச்சர் ரவி கருணா நாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற அமர்வுகளின் நிறைவில், எதிர்வரும் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.