தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வலி சுமந்த காலத்தில் உயிர் காத்த உணவு முள்ளிவாய்க்கால் கஞ்சி

யாழ் பல்கலைக்கழகத்தின் திருநெல்வேலி பால்பண்ணை அருகாமையில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் முகாமைத்துவ மாணவர் ஒன்றியம் இணைந்து  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்றிட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் முன்னெடுக்கப்பட்டது

இதன் பொழுது முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளிற்கான அஞ்சலி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட தோடு முள்ளிவாய்க்கால் கஞ்சியும். மூன்று மொழிகளிலான  துண்டுபிரசுரமும்.

விநியோகிக்கப்பட்டது.இதன்பொழுது அதிகளவான சிங்கள மாணவர்களும் நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...