Designed by Iniyas LTD
விடுதலைப் புலிகளின் புதையலை தேடி பொலிஸார்..
விடுதலைப் புலிகள் தங்கத்தை தேடி வலைஞர்மடப்பகுதியில் நேற்று அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இராகசியத்தகவலை தொடர்ந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த அகழ்வு பணிகள் ஆரம்பமாகியிருந்தது
நேற்றைய தினம் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டு இந்த அகழ்வு நடவடிக்கை சுமர் 2 மணிநேரம் தொடர்ந்துள்ளது.
எனினும் அங்கிருந்து எவ்வித பொருட்களும் மீட்க்கப்படாத நிலையில் அகழ்வு பணிகள் நிறைவிற்கு வந்துள்ளதாக புதுக்குடியிருகப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


