தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெள்ளத்தில் மூழ்கியுள்ள அச்சுவேலி தொண்டமனாறு..

அச்சுவேலி தொண்டமனாறு வீதி வெள்ளத்தால் மூடியுள்ளதால் அவ்வீதி வழியாக செல்லும்  மக்கள்  சிரமங்களை எதிர்நோக்குவதாக  தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதி நீண்டகாலமாக திருத்தப்படாமல் குன்றும் குழியுமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது வீதியை மூடி வெள்ளம் ஓடுவதனால் வீதியில் பயணிக்க முடியாத நிலை காணப்படுவதாக அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Comments
Loading...