தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணயநிதியம் தீர்மானம்…

இலங்கைக்கான நிதியுதவியை இடைநிறுத்துவதற்கு சர்வதேச நாணயநிதியம் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை  இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் பேச்சாளர் ஹொி ரைஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நிதிஉதவியை சர்வதேச நாணய நிதியம் இடைநிறுத்திவைக்க தீர்மானித்துள்ளது.

இலங்கையின் அரசியல் நிலை குறித்து மேலதிக தெளிவு ஏற்படும் வரை தாங்கள் நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016 ம் ஆண்டு சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு இணங்கியிருந்தது.

அந்த  வகையில் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும் என்ற நிபந்தனைகளின் கீழ் சர்வதேச நாணயநிதியம் இந்த நிதியுதவியை வழங்க இணங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...