Designed by Iniyas LTD
மாவீரர்களின் பெற்றோருக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைப்பு….
பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி – சிறீற்கந்தராசா அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், மக்கள் நலன் காப்பகத்தினூடாக தெரிவுசெய்யப்பட்ட ஐம்பது மாவீரர்களின் பெற்றோர்களுக்கு உலருணவும் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வானது இன்று முல்லைத்தீவு – வண்ணாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டகத்தில், மக்கள் நலன் காப்பகத்தின் முல்லை மாவட்டத் தலைவர் பாலு – மத்தியூசு அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
மங்கல விளக்கேற்றலுடன் தொடங்கிய இந் நிகழ்வில், அகவணக்கம், உரைகள் என்பன இடம்பெற்று தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்களுக்கான உலருணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டன.
மேலும் இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மதிப்புறு சாந்தி – சிறீற்கந்தராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா – ரவிகரன், பங்குத் தந்தை அன்ரன் சோர்ச், கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர்களான சி.லோகேசுவரன், ம.தொம்மைப்பிள்ளை, தி.இரவீந்திரன் மற்றும் மக்கள் நலன் காப்பக நிர்வாகிகள், வண்ணாங்குளம் கிராம உத்தியோகத்தர் வே.அருணோதயம், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மா.செயசுதர்சன் ஆகியோரோடு மாவீரர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


