Designed by Iniyas LTD
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீவிபத்து
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் உள்ள மகாலட்சுமி கோயில் அருகே இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்த தீ விபத்து மின்சார கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ விபத்து குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.