Designed by Iniyas LTD
அன்னை தெரசாவின் நினைவையொட்டி சென்னையில் 1000 அடி நீள பிரமாண்ட பேனர்!!
யுகோஸ்லேவோகியாவில் மிகவும் வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்து சமூக சேவை செய்வதில் தன்னையே அர்ப்பணித்தார்அன்னை தெரேசா.
அவரின் நினைவு தினம் செப்டம்பர் 5ம் தேதி கொண்டாடப்படுதையொட்டி, சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் எழுதிய 1,000 அடி நீள மிக பிரமாண்ட பேனரை உருவாக்கியுள்ளனர்.
சென்னை வித்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இந்த 1000 அடி நீளம் கொண்ட பேனரை வடிவமைத்துள்ளனர்.
இதில், ரொனால்ட் ரீகன் மற்றும் இளவரசி டயானா போன்ற உலக தலைவர்களையும் இணைத்து அன்னை தெரேசா படங்களையும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படமும் இந்த பேனரில் மாணவர்கள் வரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.