Designed by Iniyas LTD
கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு 93 சதவீதம் பேர் ஆதரவு: பிரதமர் மோடி பெருமிதம்
500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களிடம் 10 கேள்விகளை முன் வைத்தார்.
இந்த கேள்விகளுக்க்கு 2 ஆயிரம் பகுதிகளிலிருந்து 5 லட்சம் பேர் கருத்துச் சொல்லி உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ட்விட்டரில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு 93 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர் என்றும் 14% பேர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.