எம் தாய் மண்ணில்
அடிமைகள் நாம்
முதுகின் மீதேறி
இன்னொருவன் சுதந்திர சுடர்
ஏற்றுகிறான் பார்..!
தமிழா எரித்தாலும்
சாம்பலில் இருந்து
முளைப்பவன்
அல்லவா நீ!
வீழ்வது ஒரு நிகழ்வு
எழுவது தான் வரலாறு…!
இன்னொருவன் தருவதல்ல சுதந்திரம் .
நீயாய் பெற்றுக்கொள்!
புழுக்கள் என
எண்ணுபவர்க்கு
புலிகள் என காட்டு..!
உனக்குள்ளும்
சுதந்திரத் தீ மூட்டு.!
சிங்கக் கொடி சுறுட்டி
அடிமடியில் கட்டு!
செக்கச் சிவந்த கொடி
சீறும் சிறுத்தை கொடி
பறக்கவிடு சிரத்தின் மேல்.!
ஈழவன்
[…] கொடுமை மிக மோசமானது. இவை எல்லாமே ஈழத்தில் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் […]