குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறும் இந்தப் போட்டி மதியம் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. பட்டேல் சமூகத்தினரின் போராட்டம் காரணமாக போட்டி நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப்பகுதிகளில் இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.