நான் தமிழச்சி என்பதால்!

எனது தேசத்தின் நான் கம்யூனிஸ்ட்
என்பதற்காக யாரும் கொலைசெய்ய
வரவில்லை
எனது நகரில் நான் நாத்திகவாதி
என்பதற்காக
எனது கருத்துக்கள் ஒதுக்கப்படவில்லை
எனது ஊரில் மதவாதிகளை
நான் மதிப்பதற்காக
சாதிகளை ஆதரிப்போர் என்னை
வெறுக்கவும் இல்லை
தமிழினத்தை சேர்ந்தவள்
என்பதற்காக என்னை அழிக்க நினைக்கிறார்கள்
மேலும்
எனது தாய்மொழியில்
சில கவிதைகள் எழுதி இருக்கிறேன்
என்பதற்காக
புறக்கணிக்கிறார்கள்.

-தேன்மொழி தாஸ்

கவிதைதமிழக கவிதைதேன்மொழி தாஸ்நான் தமிழச்சி என்பதால்
Comments (0)
Add Comment