யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்குவைத்து, மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையவர் என்று கருதப்படும், பிரதான சந்தேகநபர், யாழ்ப்பாணம் பொலிஸில் சரணடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகம், நல்லூரில் கடந்த சனிக்கிழமை மாலை 5:10க்கு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.