அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறிருக்கையில் ஐ.நா.பிரதிநிதிகள் எமது நாட்டினுள் வந்து இலங்கைக்கு எதிரான சாட்சியங்களை திரட்டுகின்றனர்.
இவ்வாறு இலங்கைக்கு எதிராக சாட்சியங்கள் திரட்ட இலங்கைக்கே வருகின்றவர்களுக்கு நல்லாட்சி அரசாங்கம் வன்னி, திருகோணமலையில் உள்ள இராணுவ முகாகம்களை பார்வையிட அனுமதி வழங்குகின்றது.அவர்கள் அதனை பார்த்துவிட்டு இலங்கையைப் பாராட்டிவிட்டுச் செல்லவில்லை. ஜெனிவா சென்ற பின்னர் எமது நாட்டுக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.என தெரிவித்துள்ளார்.