Designed by Iniyas LTD
ஈழ அகதிகள் 20 பேர் தாயகம் திரும்புகின்றனர்!
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய வசதிப்படுத்தலுடனும் ஒருங்கிணைப்புடனும் இருபது ஈழத் தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இவர்கள் சென்னையிலிருந்து மிஹின் லங்கா விமான சேவையூடாக மு.ப. 11.05 மணியளவில் வருகை தர உள்ளனர்.
இலங்கையின் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் சுவாமிநாதனின் முயற்சியால் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சும் மிஹின்லங்கா விமானசேவை நிறுவனமும் அவர்களது பயணப்பொதியின் அளவையும் அதிகரித்துள்ளன.
இவ் அகதிகள் 20 பேரில் 10 ஆண்களும் 10 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் தாயகத்தின் திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு மீள்குடியமர்வதற்காக வருகை தருகின்றனர் என ஸ்ரீ சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கூறினார்.