Designed by Iniyas LTD
ஊழல் மோசடிகளுக்கு எதிராக விசேட நீதிமன்றம்!
ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில் நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க மற்றும் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி, துரித கதியில் தண்டனை விதிக்கும் நோக்கில் இந்த விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட உள்ளது.
இது குறித்த யோசனை அமைச்சரையில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த யோசனைத் திட்டத்திற்கு 16 அமைச்சரவை அமைச்சர்கள் கையொப்பமிட்டுள்ளதாக வார இறுதி பத்திரிகையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.