தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காதலுக்காக கடத்தப்பட்ட எகிப்திய விமானம்?

11எகிப்­திய பய­ணிகள் விமா­ன­மொன்றை நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தனி­யொரு நபர் கடத்திச் சென்ற சம்­பவம் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எகிப்தின் அலெக்­ஸாண்ட்ரா நக­ரி­லி­ருந்து கெய்ரோ நக­ருக்கு பய­ணித்த எகிப்­து­எயார் விமா­ன­சேவை விமா­ன­மான எம்.எஸ். 181 என்ற உள்­நாட்டு விமா­னமே இவ்­வாறு கடத்­தப்­பட்­டுள்­ளது.

அந்த விமா­னத்தில் 81 பய­ணி­களும் 5 விமான ஊழி­யர்­களும் பய­ணித்­த­தாக எகிப்­து­ எயார் விமா­ன­சேவை நிறு­வனம் தெரி­விக்­கி­றது. தொடர்ந்து திசை­மாற்­றப்­பட்டு சைப்­பி­ர­ஸி­லுள்ள லார்­ன­கனா நகரில் தரை­யி­றக்­கப்­பட்ட அந்த விமானத்திலிருந்து அனை­வரும் பாது­காப்­பாக வெளி­யேற்­றப்­பட்­ட­துடன் விமா­னக் கடத்­தலில் ஈடு­பட்­ட வரான செயிப் எல் டின் முஸ்தபா கைது­செய்­யப்­பட்­டுள்­ள­தாக பிராந்­திய அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

மேற்­படி விமான கடத்தல் செயற்­பாட்­டுக்கும் தீவி­ர­வா­தத்­துக்கும் தொடர்பு கிடை­யாது என சைப்­பரஸ் ஜனா­தி­பதி நிகொஸ் அனஸ்­ரா­ஸி­யடெஸ் தெரி­வித்­துள்ளார்.

அந்த விமா­னத்தை கடத்­திய எகிப்­திய – அமெ­ரிக்கப் பிர­ஜை­யான பயணி, தன்­னி­ட­மி­ருந்து பிரிந்து சைப்­பி­ரஸில் வாழும் தனது மனை­வியைப் பார்த்துப் பேச வேண்டும் எனக் கோரி­யதாகவும் இந்­நி­லையில் அந்தப் பெண் விமான நிலை­யத்­துக்கு அழைத்துச் செல்­லப்­பட்டதாகவும் அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

அந்த விமா­னத்­தி­லி­ருந்த அனை­வ­ரையும் பாது­காப்­பாக விடு­விப்­ப­தற்கு தாம் முன்­னு­ரிமை கொடுத்­துள்­ள­தாக சைப்­பிரஸ் ஜனா­தி­பதி ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்­கையில் கூறினார்.

EgyptAir-hijacker-arrested-300x174

இதன்­போது ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் அவ­ரிடம் விமா­னத்தைக் கடத்­தி­யவர் காதலால் துண்­டப்­பட்டா இந்த நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டார் என வின­விய போது, ” எந்த விட­யத்­திலும் எப்­போதும் ஒரு பெண் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­கிறார்” என அவர் சிரித்­த­வாறு பதி­ல­ளித்­துள்ளார்.

மேற்­படி விமா­னத்தைக் கடத்­திய நபர் விமானக் கட்­டுப்­பாட்டுக் கோபு­ரத்­துடன் தொடர்பை ஏற்­ப­டுத்தி விமா­னத்தை சைப்­பி­ர­ஸுக்கு திசை­தி­ருப்பக் கோரி­யுள்ளார்.

அவர் தான் வெடி­பொ­ருட்­களைக் கொண்ட பட்­டியை அணிந்­தி­ருப்­ப­தா­கவும் தனது கோரிக்கை நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் அந்தப் பட்­டியை வெடிக்க வைக்கப் போவ­தா­கவும் விமா­னிக்கும் ஏனை­ய­வர்­க­ளுக்கும் அச்­சு­றுத்தல் விடுத்­தி­ருந்­த­தாக எகிப்­திய சிவில் விமான சேவை தெரி­விக்­கி­றது.

தொடர்ந்து சைப்­பி­ரஸில் விமானம் தரை­யி­றக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அந்த விமா­னத்­தி­லி­ருந்த பய­ணி­க­ளையும் உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் விடு­விக்க கடத்­தல்­கா­ர­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்­டது.

அந்த விமா­னத்தில் பய­ணித்­த­வர்­களில் 8 அமெ­ரிக்­கர்கள், 4 பிரித்­தா­னி­யர்கள், 4 நெதர்­லாந்து நாட்­ட­வர்கள், ஒரு பிரான்ஸ் நாட்­டவர் உட்­பட 21 வெளி­நாட்­ட­வர்கள் உள்­ள­டங்­கு­வ­தாக எகிப்­திய சிவில் விமான சேவை நிறு­வனம் தெரி­விக்­கி­றது.

மேற்­படி கடத்தல் நாட­கத்­தை­ய­டுத்து சைப்­பி­ரஸின் தென் கடற்­கரைப் பிராந்­தி­யத்­தி­லுள்ள லார்­னகா விமான நிலையம் மூடப்­பட்டு அந்த விமான நிலை­யத்­துக்­கான விமா­னங்கள் வேறு விமான நிலை­யங்­க­ளுக்கு திருப்­பப்­பட்­டன.

இந்த சம்­பவம் தொடர்பில் நெருக்­கடி முகா­மைத்­துவ திட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சைப்­பிரஸ் வெளி­நாட்டு அமைச்சு தெரி­வித்­தது.

கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் எகிப்­திய சினாய் தீப­கற்­பத்­திற்கு மேலாக ரஷ்ய விமா­ன­மொன்று வெடித்துச் சிதறி அதில் பய­ணித்த 224 பேரும் உயி­ரி­ழந்த சம்­ப­வத்­தை­ய­டுத்தே இந்த விமான கடத்தல் நாடகம் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அந்த ரஷ்ய விமானத்தில் குண்டொன்றை எடுத்துச் சென்று வெடிக்க வைத்திருந்ததாக ஐ.எஸ். தீவிரவாதிகள் உரிமைகோரியிருந்தனர்.

லார்கனா நகருக்கு இதற்கு முன்னரும் பல விமானங்கள் கடத்தப்பட்டு திசைமாற்றப்பட்டு தரையிறக்கப்பட்டிருந்தன.

1996 ஆம் ஆண்டில் சூடானிய எயார்வேய்ஸ் விமானமொன்று 199 பயணிகளுடன் 7 ஈராக்கியர்களால் கடத்தப்பட்டு திசைமாற்றப்பட்டு லார்கனா நகர விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டிருந்தது.

Comments
Loading...