Designed by Iniyas LTD
சந்திரிக்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால், வோட்டர் எட்ஜ் வழக்கில் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு அவருக்கு பாதகமாக அமையலாம் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் அதில் போட்டியிடுவது குறித்த அறிவிப்பை வெளியிட முன்னாள் ஜனாதிபதி எண்ணியுள்ளார் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரங்கள் குறித்து நீதித்துறையினர் மத்தியில் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீண்டும் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தால் வோட்டர் எட்ஜ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு அவருக்கு பாதகமாக அமையலாம் என்றும், அவர் அந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டதாகவும் தெரியவருகிறது. குறிப்பிட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஊழலுக்குத் துணைபோயிருந்தார் என உச்ச நீதிமன்றம் குற்றம்சாட்டியிருந்தது.