தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நடந்து சென்றவர்கள் மீது லொறி மோதி பெண்கள் உட்பட மூவர் பலி!

lorry-accident-1புத்­தளம் – அநு­ரா­த­புரம் வீதியில் சாலி­ய­வெவ எனும் பிர­தே­சத்தில் நேற்று இடம்­பெற்ற விபத்தில் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த மூவர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

நேற்று அதி­காலை 5.30 மணி­ய­ளவில் இடம்­பெற்­றுள்ள இவ்­வி­பத்தில் 83 மற்றும் 62 வய­து­களை உடைய இரு பெண்­க­ளுடன் 12 வயது சிறுவன் ஒரு­வ­னுமே உயி­ரி­ழந்­துள்­ள்ளனர்.  வீதியில் நடந்­து­கொண்­டி­ருந்த இவர்கள் மீது லொறி மோதி­யதில் இந்த அகோர விபத்துச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

நேற்­றைய போயா தினத்தில் விகா­ரையில் இடம்­பெறும் சமய நிகழ்வில் கலந்து கொள்­வ­தற்­காக புறப்­பட்டு சென்ற போதே இந்த அசம்­பா­விதம் பதி­வா­கி­யுள்­ளது.

புத்­தளம் திசை­யி­லி­ருந்து வேக­மாக வந்­துள்ள லொறி ஒன்று வீதியில் நடந்து சென்று கொண்­டி­ருந்த இவர்கள் மீது மோதி­யுள்­ளது.

இவ்­வி­பத்தில் இரு பெண்­களும் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­துடன் சிறுவன் பலத்த காயங்­க­ளுடன் புத்­தளம் வைத்­தி­ய­சா­லைக்கு அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் உயி­ரி­ழந்­துள்ளார்.

காய­ம­டைந்த சிறு­வனை விபத்­துடன் தொடர்­பு­டைய லொறியின் சார­தியே லொறியில் ஏற்றிக் கொண்டு புத்­தளம் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்று அனு­ம­தித்­துள்­ள­தா­கவும், மோட்டார் சைக்கிள் விபத்­தொன்றில் சிறுவன் காய­ம­டைந்­துள்­ள­தாகத் தெரி­வித்து வைத்­தி­ய­சா­லையில் சிறு­வனை அனு­ம­தித்­து­விட்டு சாரதி லொறி­யுடன் அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எனினும் வைத்­தி­ய­சாலை பணி­யாளர் ஒருவர் குறித்த லொறியின் இலக்­கத்தை குறித்துக் கொண்­டுள்­ள­தா­கவும் அந்த இலக்­கத்தை வைத்து குறித்த லொறி­யினை அடை­யாளம் காண்­ப­தற்­கான விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் சாலி­ய­வெவ பொலிஸார் தெரி­வித்­தனர்.

இவ்­வி­பத்தில் அப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த பீ. ஏ. ஹேம­லதா (வயது 62), கே. ஏ. யசோஹாமி (வயது 83) மற்றும் இமல்கா ஹேசான் (வயது 12) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

சாலியவெவ ஸ்ரீ பொலிஸார் இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...