Designed by Iniyas LTD
பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு ஆட்கடத்தலில் ஈடுபட்ட ஐவர் கைது!
சொகுசுக் கப்பல்களை வாடகைக்குப் பெற்று பிரித்தானியாவுக்கு குடியேற்றவாசிகளை கடத்துவதில் ஈடுபட்ட 5 ஆட்கடத்தல்காரர்கள் பிரான்ஸ் பொலிஸாரால் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிரான்ஸிலிருந்து குடியேற்றவாசிகள் புகையிரதம் மற்றும் லொறிகளைப் பயன்படுத்தி பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிப்பது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக கடினமாக மாறியுள்ளதால் ஆட்கடத்தல்காரர்கள் மேற்படி புதிய வழிமுறையைக் கையாண்டு ஆட்கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள 5 ஆட்கடத்தல்காரர்களும் தமது ஆட்கடத்தல் செயற்பாடுகளுக்காக குறைந்தது 20 சொகுசு கப்பல்களை வாடகைக்கு பெற்றுப் பயன்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அவர்கள், குடியேற்றவாசிகளை பிரித்தானியாவுக்கு அழைத்துச்செல்வதற்கு அவர்கள் ஒவ்வொருவரிடமும் 5,500 ஸ்ரேலிங் பவுணுக்கும் அதிகமான தொகையை வசூலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் புதன்கிழமை இத்தாலிய, ஸ்பெயின் மற்றும் பிரித்தானிய கடல் பரப்பினூடாக அவர்களது சொகுசுக் கப்பல் பயணிப்பதை கண்காணித்த அதிகாரிகள், அந்தக் கப்பல் வடமேற்கு பிரான்ஸில் பிரிட்டானி பிராந்தியத்திலுள்ள செயின்ட் குவே போர்ட்ரியக்ஸ் துறைமுகத்தை வந்தடைந்த வேளை அதில் பயணித்த 5 ஆட்கடத்தல்காரர்களையும் கைதுசெய்துள்ளனர்.
அவர்களுடன் அந்தக் கப்பலில் பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசிக்கும் நோக்கில் புறப்பட்ட 7 உக்ரேனியர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த உக்ரேனியர்கள் அனைவரையும் நாட்டிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது குற்றச்சாட்டு எதுவும் சுமத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நன்கு திட்டமிடப்பட்டு செயற்பட்டுவந்த அந்தக் குழுவினர், 2014 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலி ருந்து ஆட்கடத்தல்களை திரைமறைவில் மேற்கொண்டு வந்துள்ளமை கண்டறியப் பட்டுள்ளது. அவர்கள் கடந்த இரு வருட காலங்களில் குறைந்தது 20 சொகுசுக் கப்பல்களை வாடகைக்குப் பெற்று இந்த ஆட்கடத்தல் செயற்பாடுகளை மேற் கொண்டு வந்துள்ளனர்.